வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மார்ச்
- மார்ச் 2, 1815 - கண்டி இராச்சியம் பிரித்தானியர் வசமாகியது. சிறைப் பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (படம்) என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
- மார்ச் 11, 1902 - யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டது.
- மார்ச் 19, 1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி மட்டக்களப்பில் தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
- மார்ச் 24, 1965 - இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- மார்ச் 31, 1990 - இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.