நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயக்கர் / நாயுடு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம்
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு
சமயங்கள்
இந்து

நாயக்கர் என்பவர்கள் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் பட்டம் ஆகும். இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் காணப்படுகிறார்கள். [1]. நாயக்கர்கள் காப்பு, கொல்லா, கம்மா[2] எனப்படும் இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாயக்கர் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் வாழுகிறார்கள். பொதுவாக நாட்டை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் (குறுநிலத்தை) நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர்.

ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு, ராஜகம்பள கொல்லா, பலிஜா, கவரா, கம்மா[3], தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவர், முத்தரையர், துளுவ வெள்ளாளர்களில் சிலர் அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.

நாயக்கர்கள் இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.

சொல்லிலக்கணம்

  • நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
  • நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
  • நாயக்கர் = நாயர் (மலையாளம்)
  • நாயக்கர் = நாயகே (சிங்களம்)
  • நாயக்கர் = நாயக் (மராத்தி)
  • நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)

மக்கள் தொகை

ஆந்திராவில் நாயுடு இனத்தவர்கள் பெரும்பான்மை மிக்கவர்கள். கருநாடகம், கேரளம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் இவர்கள் விரிந்து வாழுகிறார்கள்.

பிரிவுகள்

நாயுடு/நாயக்கர் பட்டம் பயன்படுத்தும் பிரிவுகள்

  1. காப்பு
  2. கொல்லா
  3. கவரா
  4. பலிஜா
  5. பனாஜிகா
  6. தொட்டிய நாயக்கர்
  7. முத்துராஜா நாயுடு
  8. வெலமா
  9. கம்மா
காப்பு

ஆந்திராவில் வழங்கப்படும் பெயர். இவர்கள் முன்னேறிய சாதிகள் பிரிவில் உள்ளனர், உயர் சாதியினராக கருதப்படுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால், இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர்.

பலிஜா

பலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள். இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள். இவர்கள் தென்னாடு முழுவதும் வாழுகிறார்கள். கவரா, வளையல்கார நாயக்கர், வடுகர் (கம்மவாரை தவிர்த்து)[4] ஆகியோர் பலிஜாவின் கிளை ஜாதியினர்.[சான்று தேவை];

கொல்லா

கொல்லா இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் எட்டு லட்சத்து ஆறாயிரத்து நானுறு பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது. ஆந்திராவில் தற்போதைய கணக்கெடுப்பின் படி 7% சதவீத மக்கள் இச்சமுகத்தினர் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நாயக்கர் மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ராஜகம்பள நாயக்கர் பிரிவில் வரும் கொல்லவார்கள் (கொல்லா+வாரு=கொல்லவாரு) "வாரு"என்பது "அவர்கள்" என்று தெலுங்கில் பொருள். உதாரணம் கம்மா+வாரு=கம்மவார்.

வெலமா

தமிழ்நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர்.

முத்துராஜா நாயுடு[5][6][7][8]

முத்துராஜா நாயுடு (Muthuraja Naidu) அல்லது முத்திரிய நாயுடு (Muthiriya Naidu)[9] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இச் சமூகத்தினர் செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வசிக்கின்றனர்.[10]

தொட்டிய நாயக்கர்

தெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். தாங்கள் கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். [சான்று தேவை]இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே.

இவர்கள் கொல்லாவின் கிளை ஜாதியினர்.[சான்று தேவை] இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வைத்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '"ஊர் நாயக்கர்"' என்று அழைப்பர். இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 52 பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டதே. விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்க்கை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.[11]

தொட்டிய நாயகர்களின் கிளை

தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:

தெலுங்கு பேசுவோர் :

  1. கொல்லவார் - கோபாலர் மரபு -சங்கம வம்சாவளிகள்
  2. சில்லவார் - ஒழுக்கம் பராமிப்பவர்
  3. தோக்கலவார் - செல்வம் சேர்த்தல்- ஆற்றினை கடந்து செல்லும் நிலையில் ஆநிரையின் தோக்கலு (வால்) பிடித்து சென்றவர்கள் .
  4. பாலவார் -பாலமு என்றால் படை - படை வீரர்கள்
  5. வேகிளியார் (சில்லவார் மற்றும் பாலவார் கலந்து குறிக்கப்பட்ட இனம்) - சுத்தமானவர்கள் என்று பொருள், மேலும் வேலியை போல நாட்டினை காத்தவர்கள்.
  6. வல்லக்கவார் (ஏற கொல்லா) - கிருஷ்ணர் காட்டினை எரிக்கையில் தீயில் இருந்து வந்தவர்கள் , தீ - சிவப்பு என்பதால், சிவப்பு கொல்லா தெலுங்கில் ஏற கொல்லா என்றானது.[சான்று தேவை]
கன்னடம் பேசுவோர்
  1. காப்பிலியர் - [கன்னட காப்பு இனம்] காவல் காத்தவர்கள் - ஹொய்சாலா மரபினர்- விஜயநகர மரபின் முக்கிய குழுவினர்.[சான்று தேவை]
  2. அனுப்பர் - அல்லி குலத்தோர் -மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்). இவர்களின் வழிவந்தவர்கள் அல்லி குல அனுப்பர்கள் விஜயநகர மரபினர்.[சான்று தேவை]
  3. குருமர் - குரி என்றால் ஆடு, ஆடுகளை மேய்க்கும் மரபினர் - விஜயநகரமும் இவர்கள் இல்லாமல் இல்லை.

இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் .

தெலுங்கு பேசும் கம்பளத்தார்கள் நாயக்கர், நாயுடு என்றும், கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் கவுண்டர், கவுடா என்றும் அழைக்க படுகின்றனர். இவர்கள் ராயர் மரபினர்.

ஆந்திராவில் கொல்லா என்றும், கர்நாடகத்தில் வொக்கலிகர் (குடியான சாதி) என்றும், மராத்தியத்தில் நாயக் குருமர் என்றும், ஒரிசா இலங்கையில் நாயக் என்றும் பல பெயர்களில் அழைக்க படுகின்றனர்.[சான்று தேவை]

கிருஷ்ணர் கம்பளத்தார் மக்களுக்கு தகப்பன், மாதவன் பெருமாள் இவர்களின் வம்சாவளி, ராமர் இவர்களின் அண்ணன் முறை.. இது புராணங்கள் கம்பளத்தார் உறவுகளை சொல்கிறது.[சான்று தேவை]

குல தெய்வம்

பலிஜா

ரேணுகா அம்மா, எல்லம்மா, கனகம்மா, மீனாட்சி அம்மா, திருமால், மல்லன்னா, அங்கம்மா, நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் .

கவரா

அழகர் சாமி, சின்னம்மா, சென்னம்மா, மங்கம்மா, நாண்ணம்மா, மதுரை மீனாட்சி போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் .[சான்று தேவை]

ராஜ கம்பளத்தார்

ஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம், பொம்மன்னா, பொம்மக்கா, வீர சின்னையா, மல்லையா. போன்ற தெய்வங்களை வணங்குவர் .

பலிஜா, கவரா, ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள். போரில் இறந்தவர்கள், தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயத்தினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

கம்மவார் நாயக்கர்

கம்மவார், நாயுடு, நாயக்கர், ராவ், சௌதரி, ராயுடு, ரெட்டி என்று அழைக்கப்படும் இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், தேனி, கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள். அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர். இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். கம்மநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். மேலும் காகதீய, விஜயநகர மன்னர்கள் காலத்திலும் படைத்தளபதிகளாகவும் படைவீரர்களாகவும் இருந்து வந்துள்ளனர். காப்பு இனத்தில் இருந்து மாறுபட்டாலும், கம்மகாப்பு என்ற இனம் தெலுங்கானா பகுதியில் இன்றும் உள்ளது. தமிழகத்தில் இளையரசனேந்தல், குருவிகுளம், நெய்க்காரப்பட்டி முதலிய ஜமீன்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். தற்போதைய ஆந்திர மாநில மக்கள் தொகையில் 7% கொண்ட இவர்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல், சினிமாத்துறை, விளையாட்டுத்துறை ஆகியவற்றில் முன்னேறிய மக்களாக உள்ளனர். பல கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் இவர்களால் நடத்தப்படுகின்றன.

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள், கோட்டைகள்

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்

அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்[14]

காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்

கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்

இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .

நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள்

நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :

  • திருமலை நாயக்கர் மகால் - திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. தமிழகத்தில் காணக்கிடைக்கும் ஒரே கோட்டை.
  • திருச்சி மலைக்கோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை
  • நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
  • திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
  • வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
  • உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
  • சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு

குறிப்பிடத்தக்க நபர்கள்

பலிஜா (கவரா) இனம்

கொல்லா (இராஜகம்பளம்) இனம்

கம்மவார் இனம்

மேலும் படிக்க

  1. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
  2. கண்டி நாயக்கர்
  3. ராஜகம்பளம்
  4. பலிஜா
  5. போயர்
  6. கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்
  7. பனாஜிகா
  8. முத்துராச்சா
  9. வலஞ்சியர் சமூகம்

மேற்கோள்கள்

  1. "APonline - History and Culture-History". web.archive.org. 2012-07-16. Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Castes and Tribes of Southern India/Naidu - Wikisource, the free online library". en.m.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
  3. "Castes and Tribes of Southern India/Naidu - Wikisource, the free online library". en.m.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
  4. http://princelystatesofindia.com/Polegars/polegars.html
  5. Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg, ed. (1990). Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu. Sage Publications. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780803996397. The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu Like other castes originating from Andhra, they are bilingual, often speaking Telugu in family circles and Tamil outside the house {{cite book}}: no-break space character in |editor1-last= at position 22 (help); no-break space character in |title= at position 17 (help)CS1 maint: multiple names: editors list (link)
  6. Eveline Masilamani-Meyer, ed. (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783447047128. Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas.
  7. K. M. Venkataramaiah, ed. (1996). A handbook of Tamil Nadu. International School of Dravidian Linguistics. p. 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185692203. Muthuracha: A Telugu caste found in some districts of Tamil Nadu, the Muthuracha (muthurācha) is also called Muttaraiyan. Some are talaiyāris or watchmen of villages. They seem to be a major sect in the coastal villages of Andhra Pradesh
  8. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, ed. (1981). Biology of the People of Tamil Nadu. p. 21. Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  9. ந. சி கந்தையா பிள்ளை (ed.). சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். p. 156. முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள் {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help); no-break space character in |quote= at position 13 (help)
  10. நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, ed. (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. p. 102. செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர் {{cite book}}: no-break space character in |editor1-last= at position 5 (help); no-break space character in |publisher= at position 6 (help)CS1 maint: multiple names: editors list (link)
  11. [1]
  12. N.K., Singh. "Coronation of Shiva: Rediscovering Masrur Temple". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  13. "மதுரை மீனாட்சி அம்மன் கோவில்". https://www.hindutamil.in/amp/news/others/121663-14.html. 
  14. "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
    • K. A. Nilakanta Sastri, ed. (1946). Further Sources of Vijayanagara History. University of Madras. p. 176. Moreover, Acyutadeva Maharaya formally crowned Viswanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the king of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him the golden idols of Durga, Laksmi and Lakshmi-Narayana and sent him with ministers, councillors and troops to the south. Visvanatha Nayudu reached the city of Madhura, from which he began to govern the country entrusted to his care. - taken from the Kaifiyat of Karnata-Kotikam Kings, LR8, pp.319-22
    • Konduri Sarojini Devi, ed. (1990). Religion in Vijayanagara Empire. Sterling Publishers. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-1167-9. According to the Kaifiyat of the Karnata Kotikam Kings, "Acyutadeva Maharaya formally crowned Visvanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the King of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him with golden idols of Durga, Lakshmi and Lakshminarayana and sent him with ministers, councillors and troops to the South."
    • Lennart Bes (2022). The Heirs of Vijayanagara: Court Politics in Early Modern South India (PDF). Leiden University Press. p. 79. The dynasty's first ruler was Vishvanatha Nayaka, son of the imperial courtier and military officer Nagama Nayaka. He belonged to one of the Balija castes, which originated in the Telugu region and whose members undertook both military and mercantile activities. Vishvanatha was possibly installed at Madurai around 1530 and reigned until c. 1563
  15. N. Venkataramanayya (1951). Raghunatha Nayakabhyudayamu. T.M.S.S.M Library, Thanjavur. p. 21.
    • Benjamin Lewis Rice, ed. (1909). Mysore and Coorg from the Inscriptions. A. Constable & Company, Limited. p. 164. The Channapatna chiefs generally bore the name Rana . Jagadēva - Rāya , after the founder of the family in Mysore. He was of the Telugu Banajiga caste and had possessions in Bāramahāl . His daughter was married to the Vijayanagar king
    • Traffic Management Plans for Major Towns in Bangalore Metropolitan Region (PDF). Bangalore Metropolitan Region Development Authority. 2010. p. 170. CHANNAPATNA: The village was ruled by the King Timmapparaja urs. Later Rana Jagadevaraya of Telugu Banajiga Balija Community chooses it as his Capital city. Rana Jagadeva Raya and his family ruled the territory of Baramahal along with Mysore.
    • Ranjit Kumar Bhattacharya, S. B. Chakrabarti, ed. (2002). Indian Artisans: Social Institutions and Cultural Values. Ministry of Culture, Youth Affairs and Sports, Department of Culture, Government of India. p. 36.
  16. Na.Vanamamalai, ed. (1981). Interpretation of Tamil Folk Creations. Dravidian Linguistics Association. p. 178.
  17. Ramaswamy, Vijaya (2014), "Mapping migrations of South Indian weavers before, during and after the Vijayanagara Period: Thirteenth and Eighteenth Centuries", in Lucassen, Jan; Lucassen, Leo (eds.), Globalising Migration History: The Eurasian Experience (16th-21st Centuries), BRILL, p. 99
  18. A. Satyanarayana, ed. (2007). Society, Economy, and Polity in Modern Andhra. Kanishka Publishers Distributors. p. 7.
  19. Kotta Bhavaiah Choudary, ed. (2007). A Brief History of the Kammas. The University of California. p. 63.
  1. Balijavaaru Puraanam, by Sri Salem Pagadaala Narasimhalu Nayudu.
  2. Balijakula Charithra, by Kante Narayana Desayi
  3. Andhrula Sankshiptha Charitra, by Balarama Murthi
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயக்கர்&oldid=3917032" இலிருந்து மீள்விக்கப்பட்டது