வலைவாசல்:சைவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சைவ வலைவாசல்
.

அறிமுகம்

ஓம்
ஓம்

சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.

சைவ சமயம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

முருகன்
முருகன் இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.



சைவ அடியார்கள்

மங்கையர்க்கரசியார் என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவராவர். சோழ இளவரசியான இவர், நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை மணந்தார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில் மங்கையர்கரசியாரும் ஒருவர். திருஞான சம்மந்தரை திருமறைக்காட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வரவைத்தார். அந்நேரத்தில் பாண்டிய மன்னனை வெப்புநோய் தாக்க, கூன்பாண்டியனானர். அந்நோயை சமணர்களால் குணப்படுத்த இயலாமல் போக, சம்மந்தரிடம் தன் கணவரை பற்றியிருந்த வெப்புநோயை குணமாக்க வேண்டினார் மங்கையர்கரசியார்.. ஞானசம்மந்தர் திருநீர் அளித்து அந்நோயிலிருந்து பாண்டியனை விடுவித்தார். அதனால் பாண்டிய நாட்டில் சமணம் மறைந்து சைவம் தளைத்தது. இதனால் சம்மந்தர் மானி என்ற இயற்பெயர் கொண்டவரை மங்கையற்கரசியார் என்று அழைக்க அப்பெயரே நிலைத்தது.


சிறப்புப் படம்

சிவ அடையாளங்கள்

சிவபெருமான் நெற்றிக்கண் உடையவராகவும், வாசுகி பாம்பினை கழுத்தில் ஆபரணமாக தரித்தவராகவும், சடாமுடியில் பிறையையும், கங்கையையும் கொண்டவராகவும் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த அடையாளங்கள் சிவபெருமானது சிலைகளிலும், ஓவியங்களிலும், சைவ நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றன.

படம்:
தொகுப்பு



பகுப்புகள்

சைவ சமய பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

  • ஏழு பிரளயங்களில் பெரும் பிரளயமான மகாபிரளயத்தின் பொழுது சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடு அனைவருக்கும் கட்டாய மோட்சம் அளித்து தனக்குள் ஒடுக்குகிறார்.
  • சிவபெருமான் நாரத முனிவருக்கும், சுக்ரமுனிவர்களுக்கும் இசையைப் பற்றி கற்பித்த உருவம் வீணா தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
  • அகச்சந்தான குரவர்கள் என திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அழைக்கப்படுகிறார்கள்.
  • திருமால் மற்றும் பிரம்ம தேவருக்கு சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளித்தை நினைவு கூறும் விதமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
  • தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்சபுராணம் என்று அழைக்கப்பெறுகிறது.
  • தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.


தொடர்பானவை

தொகு  

சைவம் பற்றி சான்றோர் கூறியமை


மொகஞ்சதாரோ, ஹரப்பா என்பவை மறைவாக வைத்திருந்த நமக்கு வெளிப்படுத்தும் புது வெளிப்பாடுகள் பலவற்றுள் முதன்மை யாக குறிப்பிடத்தக்கது. யாதெனில், சிவ நெறியின் வரலாற்றுத் தொன்மை நெறிகளில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும் - அறிஞர் சர் ஜான் மார்ஷல்


தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
இந்து சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தொண்டர்கள்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்


தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
வைணவம்வைணவம்
வைணவம்
சாக்தம்சாக்தம்
சாக்தம்
கௌமாரம்கௌமாரம்
கௌமாரம்
சௌரம்சௌரம்
சௌரம்
காணாபத்தியம்காணாபத்தியம்
காணாபத்தியம்
இந்து சமயம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணபத்தியம்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:சைவம்&oldid=3783252" இலிருந்து மீள்விக்கப்பட்டது