நாக வழிபாடு பண்டைய திராவிடர்களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் இந்து மற்றும் பௌத்த மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் ஆதி பர்வம் முதலான பண்டைய நூல்களிலும் நாகவடிவத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகக் கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டும் செய்திகளும் உள்ளன.
இசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம். இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி ,சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர். இசக்கி அம்மன் பள்ளர்,கோனார், நாடார் ஆகிய சாதிச் சமூகங்களின் குலத் தெய்வமாகும். இசக்கி அம்மன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
இசக்கி அம்மன் என்பது இயக்கி அம்மன் என்பதன் மருவிய வடிவம். இசக்கி அம்மன் வழிபாடு வட மொழி கலந்த இந்து சமய வழிபாட்டு முறைகளுக்கு உட்பட்டது அல்ல. குறிப்பாக இசக்கி அம்மன் பூசாரிகள் பொதுவாக பள்ளர், கோனார்,நாடார் ஆகிய ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்தே வருகின்றனர்.