வலைவாசல்:கருநாடக இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தொகு  

கருநாடக இசை வலைவாசல்


வீணை வரைபடம்
வீணை வரைபடம்

கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

கருநாடக இசை பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. இவ்விதம் நடக்கும் இசை விழாவே டிசம்பர் இசை விழா என்றழைக்கப்படுகிறது. இவ்விழா நடக்கும் இப்பருவம், டிசம்பர் சீசன் எனப் பரவலாக சொல்லப்படுகிறது. மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும், கலைஞர்கள் மற்றும் நேயர்கள் பெருமளவில் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தொகு  

பகுப்புகள்


கருநாடக இசை பகுப்புகள்


தொகு  

கலைஞர்கள்


கே. பி. சுந்தராம்பாள்
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார்.
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


  • கருநாடக இசை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கருநாடக இசை தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • கருநாடக இசை தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கருநாடக இசை தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கருநாடக இசை தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


  • கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் பாடலில் இடம்பெறும் வகையில் எழுதுவர். அச்சொல் முத்திரை என அழைக்கப்படும்.
  • ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இராகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • மோர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 3ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம்.
தொகு  

சிறப்புப் படம்


{{{texttitle}}}

தண்ணுமை (மிருதங்கம்) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

படம்: User:Ranveig
தொகுப்பு


தொகு  

திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு


பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
மலைக்கோயில் வாசலில்... நடபைரவி இளையராஜா மனோ, சுவர்ணலதா வீரா
பாட்டும் நானே பாவமும் நானே... கௌரிமனோகரி கே. வி. மகாதேவன் டி. எம். சௌந்தரராஜன் திருவிளையாடல்
கொஞ்சநாள் பொறு தலைவா... ஆனந்தபைரவி தேவா ஹரிஹரன் ஆசை
தொகு  

செய்திகளில் கருநாடக இசை


விக்கிசெய்திகளில் கருநாடக இசை வலைவாசல்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்தமிழ்
தமிழ்
தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழ் தமிழர் தமிழ்நாடு இந்தியா இலங்கை
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:கருநாடக_இசை&oldid=1833687" இலிருந்து மீள்விக்கப்பட்டது