பெ. அப்பால நரசிம்மம்
பெ. அப்பால நரசிம்மம் | |
---|---|
சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1983–1984 | |
முன்னையவர் | குடிவாடா அப்பன்னா |
பின்னவர் | அல்ல ராமச்சந்திர ராவ் |
தொகுதி | பெண்டுருத்தி |
மாநிலங்கவை உறுப்பினர் | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | அப்பாலநாயுடு |
பின்னவர் | கோனத்தலா ராமகிருஷ்ணா |
தொகுதி | அனகாபள்ளி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1938 நாகுலப்பள்ளி, விசாகப்பட்டினம் மாவட்டம் |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி |
பெடகம்செட்டி அப்பால நரசிம்மம் (Petakamsetti Appala Narasimham) (1938 - 2009) ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். [1]
வாழ்க்கை[தொகு]
விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபள்ளி வட்டத்திலுள்ள நாகுலபள்ளி கிராமத்தில் 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பாலநரசிம்மம் பிறந்தார்.
அரசியல்[தொகு]
இவர் சுயேச்சையாக சமிதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் என். டி. ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 1983 மற்றும் 1984 க்கு இடையில் ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பெண்டுர்த்தி தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
இவர் 1984 இல் விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்தார் [3] 1984 இல் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து எட்டாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கௌரவம்[தொகு]
2009 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள வைர பூங்காவில் இவரது நினைவாக இவருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது [4]