உள்ளடக்கத்துக்குச் செல்

பித்துரு உலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பித்துரு உலகம் அல்லது பித்ரு லோகம் (Pitru loka) என்பது இந்து தர்மத்தின் படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.[1]இதனை பிரேத லோகம் என்றும் அழைப்பர்.[2] பித்துரு லோகம் பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும்[3] [4] நடுவில் இருப்பதாக பாகவத புராணம் (காண்டம் 5, அத்தியாயம் 24)  கூறுகிறது.[5]

இந்து சமய நம்பிக்கைகளின் படி, உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய - பாவ கர்மவினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, செய்த பாவ - புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்துரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருப்பர். பித்துரு லோகத்தினர் முற்பிறவியில் செய்த கருமவினைகளுக்கு ஏற்ப, மீண்டும் மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு பிறவியாகவோ பிறப்பர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. SOUL'S JOURNEY AFTER DEATH
  2. Preta loka (world of Spirits
  3. http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=82[தொடர்பிழந்த இணைப்பு]
  4. அந்தரிட்சம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "SRIMAD BHAGAVATA by Krsna-Dwaipayana Vyasa" (PDF). Archived from the original (PDF) on 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்துரு_உலகம்&oldid=3847817" இலிருந்து மீள்விக்கப்பட்டது