த. கோ. கு. மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. கோ. கு. மேனன்
T. G. K. Menon
பிறப்பு2 மார்ச் 1940
கொடுங்கல்லூர், திரிச்சூர், இந்தியா
இறப்பு12 ஜூன் 2021
இந்தோர் (மத்தியப் பிரதேசம்)
பணிசமூக செயற்பாட்டாளர்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
விருதுகள்பத்மசிறீ
ஜம்னாலால் பஜாஜ் விருது

தச்சேரில் கோவிந்தன் குட்டி மேனன் (T. G. K. Menon)(2 மார்ச் 1940-12 ஜூன் 2021) என்பவர் இந்தியச் சமூக சேவகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். மேனன் 2 மார்ச் 1940 அன்று கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் பிறந்தார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கஸ்தூர்பாகிராமின் கீழ் சுற்றுச்சூழல் நட்பு பாசன மற்றும் விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்தியதில் இவரது பங்களிப்புகள் முக்கியமானதாகத் தெரிவிக்கப்படுகின்றன. இவர் இந்தியாவில் பயோ டைனமிக் விவசாயத்தை ஊக்குவித்தற்காக அறியப்படுகிறார்.[1] 1989இல் ஜம்னாலால் பஜாஜ் விருதை இவர் பெற்றார். 1991ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமையியல் விருதான பத்மசிறீ விருதினை இவருக்கு வழங்கி கெளரவித்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "What is Bio-Dynamic Agriculture?". Biodynamics. 2015. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._கோ._கு._மேனன்&oldid=3742869" இலிருந்து மீள்விக்கப்பட்டது