கங்கா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜா கங்கா சிங்
பிகானேரின் மகாராஜா
பிகானேரின் 21வது மகாராஜா
ஆட்சிக்காலம்1888–1943
முன்னையவர்துங்கர் சிங்
பின்னையவர்சாதுல் சிங்
பிறப்பு13 அக்டோபர் 1880
பிகானேர், பிகானேர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு2 பெப்ரவரி 1943(1943-02-02) (அகவை 62)
மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
வல்லப கன்வர்
தன்வர்
பட்டியான்
குழந்தைகளின்
பெயர்கள்
இராம் சிங்
சந்த் கன்வர்
சாதுல் சிங்
பிஜாய் சிங்
வீர் சிங்
சிவ கன்வர்
தந்தைஇலால் சிங் அசகிப் மகாராஜா
தாய்சந்திராவதி

மகாராஜா சர் கங்கா சிங் (Ganga Singh) (13 அக்டோபர் 1880 - 2 பிப்ரவரி 1943), 1888 முதல் 1943 வரை பிகானெர் (இந்தியாவின் இன்றைய ராஜஸ்தான் ) மாநிலத்தை ஆண்ட மகாராஜா ஆவார். ஏகாதிபத்ததிய போர் அமைச்சரவையின் உறுப்பினராக, இவர் வெர்சாய் அரண்மனையில் கண்ணாடி மண்டபத்தில் "அமைதி ஒப்பந்தம்" கையெழுத்தாகும் போது இருந்தார். 

இவர் ஒரு நவீன சீர்திருத்த தொலைநோக்கு பார்வையாளராக பரவலாக நினைவுகூரப்படுகிறார்.

சுயசரிதை[தொகு]

பிகானேர் மாநிலத்தின் ஆண்டுவந்த இராஜ்புத்திரக் குடும்பத்தைச் சேர்ந்த இலால் சிங் சாகிப் மற்றும் அவரது மனைவி சந்திரவதிஜி ஆகியோருக்கு 1880 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி விஜயதசமி நாளில் கங்கா சிங் பிறந்தார். [1]

இறப்பு[தொகு]

இவர் 56 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 62 வயதில் 2 பிப்ரவரி 1943 அன்று மும்பையில் இறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மகன் சாதுல் சிங் பிகானேரின்|மகாராஜா ஆனார்.

சாதனைகள்[தொகு]

1919-இல் கங்கா சிங்
  • சிங் கங்கை கால்வாயை கட்டி புதிய பகுதிக்கு வந்து குடியேற மக்களை ஊக்கப்படுத்தினார். பஞ்சாபின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அங்கு குடியேறினர். அவர்களில் பெரும்பாலும் நில உரிமையாளர்களான சீக்கிய குடும்பங்கள், 1920-களில் இந்த பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
  • 1899-1900 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான பஞ்சத்தை இவர் வெற்றிகரமாக சமாளித்தார். இந்தப் பஞ்சம், இப் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபட ஒரு நீர்ப்பாசன அமைப்பை ஏற்படுத்த இளம் மகாராஜாவைத் தூண்டியது.
  • இவர் சிறீ கங்காநகர் என்ற நகரத்தையும் அதன் சுற்றுப்புறப் பகுதியையும் ராஜஸ்தானின் மிகவும் வளமான தானியக் கிண்ணமாக உருவாக்கினார்
  • இவர் 1902 மற்றும் 1926 க்கு இடையில் பிகானேரில் (இவரது தந்தை லால் சிங்கின் நினைவாக பெயரிடப்பட்டது) இலால்கர் அரண்மனையையும் கட்டினார்.
  • இவர் இரயில்வே மற்றும் மின்சார வலையமைப்பை மாநிலத்திற்கு கொண்டு வந்தார்.
  • சிறைச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். பிகானேர் கைதிகள் இந்தியாவின் தரைவிரிப்புகளை நெய்து தயாரித்து சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்தனர்.
  • இவர் நகராட்சிகளுக்கு தேர்தல் போன்ற பகுதி உள் ஜனநாயகத்தை நிறுவினார். மேலும், உதவி மற்றும் ஆலோசனைக்காக ஒரு மந்திரி சபையை நியமித்தார்.
  • சில நிலச் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • இவர் தனது மாநிலத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு அண்டை மாநிலத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளைத் தூண்டினார்.
  • இவர் 1931 ஆம் ஆண்டில் இராம்தேவ்ராவில் இராம்தேவ் பீரின் சமாதிக்கு சமாதி மேலே இருக்கும் கோவிலை கட்டினார்.
  • பெண்கல்விக்காக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவினார்.
  • தேஷ்நோக்கில் உள்ள கர்னி மாதா கோவிலின் பிரதான கதவுகளாகப் பயன்படுத்துவதற்காக அலங்காரமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு வெள்ளிக் கதவுகளை இவர் நன்கொடையாக வழங்கினார்.

சான்றுகள்[தொகு]

  1. . 2013-03-01. {{cite book}}: Missing or empty |title= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_சிங்&oldid=3463489" இலிருந்து மீள்விக்கப்பட்டது