அர்விந்து கண்பத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அர்விந்து கண்பத், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1951-ஆம் ஆண்டின் டிசம்பர் 31-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலிலில், தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

2019 இந்தியப் பொதுத் தேர்தலில், இவர் மீண்டும் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார். மேலும் இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் பெருந்தொழில்கள் மற்றும் பொதுத்துறை தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சராக 30 மே 2019 அன்று பதவியேற்றார்.[2] [3]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
  2. "Know your Minister: Arvind Sawant - Heavy Industries and Public Enterprise". Money Control. 31 May 2019. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
  3. "Rashtrapati Bhavan: Press Comminique" (PDF). India. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்விந்து_கண்பத்&oldid=3541456" இலிருந்து மீள்விக்கப்பட்டது