விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 29, 2009
- 818 மீட்டர் உயரமுடைய துபாய் கோபுரம் அல்லது பூர்ச் துபாய் உலகின் அதி உயர் வானளாவி ஆகும்.
- தேங்காய் நண்டு இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.
- நூறாண்டுப் போர் எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .
- யெனி கல்மெண்ட் என்ற பிரான்சிய பெண் 122 ஆண்டுகளும் 164 நாட்களும் வாழ்ந்து (1875-1997) இதுவரை ஆதார பூர்வமாக உலகில் அதிக நாட்கள் வாழ்ந்த மனிதராக கருதப்படுகிறார்.
- இந்திய செவ்வியல் மொழிகளாக இதுவரை தமிழ் (2004), சமசுகிருதம் (2005), கன்னடம் (2008), தெலுங்கு (2008) ஆகியவை இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.