மகேந்திரா உலக நகரம், புது சென்னை
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
மகேந்திரா உலக நகரம், புது சென்னை(ஆங்கிலம்:Mahindra World City, New Chennai aka Mahindra City) இயக்கத்திலிருக்கக் கூடிய இந்தியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகும். மகேந்திரா குழுமத்தாலும் தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தாலும்(டிட்கோ-TIDCO) பொதுத்துறை,-தனியார்துறை முனைவால் உருவாக்கப்பட்ட இது இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட வணிக நகரம் ஆகும்.
அமைவிடம்[தொகு]
மகேந்திரா உலக நகரம், புது சென்னை என்று குறிப்பிடப்பட்டாலும் இந்நகரம் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 45-ல் செங்கல்பட்டுக்கு அருகில்தான் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்நகரம் சாலை வழியாகவும் தொடர்வண்டி வழியாகவும் எளிதில் அடையும் வகையில் அமைந்துள்ளது. இந்நகருக்கு அருகில் பரணூர் தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரா_உலக_நகரம்,_புது_சென்னை&oldid=3775838" இலிருந்து மீள்விக்கப்பட்டது