பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
Appearance
அண்ணா பல்கலைக்கழகத்தின் 1984-85 வளர் தமிழ் மன்றத்தின் ஊடாக தோன்றி தன்னாட்சி பெற்ற மையமாக வளர்ந்த அமைப்பே பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் ஆகும். தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்குவது, ஊக்குவிப்பது, பரப்புவதுமே இதன் முதன்மைக் குறிக்கோள் ஆகும். இம் மையத்தின் இயக்குனர் சி. சே. சுப்பராமன் ஆவார்.