திருபாய் நாரன்பாய் பட்டேல்
மாண்புமிகு தலைமை நீதியரசர் திருபாய் நாரன்பாய் பட்டேல் Dhirubhai Naranbhai Patel | |
---|---|
தலைமை நீதிபதி தில்லி உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 ஜூன் 2019 | |
பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | இராஜேந்திர மேனன் |
செயல் தலைமை நீதிபதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 24 மே 2019 – 6 ஜூன் 2019 | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | அனிருத்தா போசு |
பின்னவர் | பிரசாந் குமார் (செயல்) |
நீதிபதி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 3 பிப்ரவரி 2009 – 23 மே 2019 | |
பரிந்துரைப்பு | கொ. கோ. பாலகிருஷ்ணன் |
நியமிப்பு | பிரதிபா பாட்டீல் |
நீத்பதி குஜராத் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 7 மார்ச் 2004 – 2 பிப்ரவரி 2009 | |
பரிந்துரைப்பு | வி. நா. கரே |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 மார்ச்சு 1960 குசராத்து |
முன்னாள் கல்லூரி | எல். ஏ. ஷ சட்டக் கல்லூரி |
திருபாய் நாரன்பாய் பட்டேல் (Dhirubhai Naranbhai Patel)(பிறப்பு 13 மார்ச் 1960) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி உள்ளார். பின்னர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றம் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3]
கல்வி[தொகு]
பட்டேல் 13 மார்ச் 1960-ல் பிறந்தார். இவர் அகமதாபாதில் உள்ள எம், ஜி. அறிவியல் கல்லூரியில் 1979ஆம் ஆண்டு, இளநிலை அறிவியல் பட்டமும், 1981ஆ, ஆண்டு முது அறிவியல் பட்டம் கரிம வேதியியலில் பெற்றார். பின்னர் எல். எல். பி. மற்றும் எல். எல். எம். சட்டக் கல்வியினை அகமதாபாத்தில் உள்ள எல். ஏ. ஷா சட்டக் கல்லூரியில் பயின்றார். சட்டக் கல்வியின்போது இவர் விருதுகள் பல பெற்றார்.[4]
நீதிபதி பணி[தொகு]
இவர் 27 ஜூலை 1984-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். பின்னர் மார்ச் 7, 2004 அன்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2006 ஜனவரி 25-ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 3, 2009 அன்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட இடமாறுதல் பெற்றார். இவர் 24 மே 2019 அன்று ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஜூன் 7, 2019 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[5][6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Emmanuel, Meera (13 May 2019). "Justice DN Patel recommended as Chief Justice of Delhi High Court". Bar & Bench. https://www.barandbench.com.
- ↑ "Orders of appointment of Shri Justice Dhirubhai Naranbhai Patel. Judge of the Jharkhand H C, to be CJ of the Delhi HC" (PDF). 22 May 2019. பார்க்கப்பட்ட நாள் 22 May 2019.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ Cite web|url=http://doj.gov.in/sites/default/files/Orders%20of%20appointment%20of%20Shri%20Justice%20Dhirubhai%20Naranbhai%20Patel%2C%20Sr.%20most%20Judge%20of%20Jharkhand%20HC%20as%20ACJ%20%2822.05.2019%29.pdf%7Ctitle=Orders of appointment of Shri Justice Dhirubhai Naranbhai Patel, Sr. most Judge of Jharkhand HC as ACJ|last=|first=|date=|website=|archive-url=|archive-date=22 May 2019|access-date=22 May 2019
- ↑ https://jharkhandhighcourt.nic.in/honble-mr-justice-dhirubhai-naranbhai-patel
- ↑ http://judicialacademy.nic.in/organisation/hon%E2%80%99ble-mr-justice-dhirubhai-naranbhai-patel
- ↑ http://dhcmediation.nic.in/profile/honble-mr-dhirubhai-naranbhai-patel-1