சித்திரவதைக்கு உட்படா உரிமை
சித்திரவதைக்கு உட்படா உரிமை (ஆங்கிலம்: Freedom from torture) என்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். சித்திரவதை, மனிதத்தன்மையற்ற அல்லது அவமானப்படுத்தும் செயல்கள் ஆகியவை குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெரிதும் பாதிப்பதால் இவை மிகவும் கடுமையாக அனைத்துலகச் சட்டங்களில் தடைசெய்யப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பங்களிலும் இவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.[1]