சார்ல்ஸ் அன்ரனி
சார்ல்ஸ் அன்ரனி (Charles Anthony) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகன் ஆவார்[1].
பெயர்க் காரணம்[தொகு]
தனது இயக்கத்தின் படைத் தளபதிகளுள் ஒருவரான சார்லஸ் அந்தோணி சீலனின் நினைவாக தனது மகனுக்கு சார்ல்ஸ் அன்ரனி என பிரபாகரன் பெயரிட்டார்[2].
கல்வி[தொகு]
உயர்கல்வி பயில அயர்லாந்துக்கு அனுப்பப்பட்ட சார்ல்ஸ் அன்ரனி, வானூர்திப் பொறியியலில் பட்டம் பெற்றார்.
ஈழப் போராட்டப் பங்களிப்பு[தொகு]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கும், வான் புலிகள் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கியதாக நம்பப்பட்டது.
இறப்பு[தொகு]
2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்டப் போரில் சார்ல்ஸ் அன்ரனி கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் 2009 மே 18, அன்று அறிவித்தது.[3].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "SL govt releases picture of Charles Anthony Prabhakaran". indiatodayin. 7 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014.
- ↑ "Passport for Prabakaran's son?". தி இந்து. 26 பிப்ரவரி 2003. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Most of LTTE top brass killed: Army". தி இந்து. 19 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014.