சவண்டலை (அல்லது Berrya cordifolia), எனப்படுவது பெருமளவு ஆசியாவின் அயன மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த[2] ஒரு தாவரம். இது ஆபிரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இது இலங்கையின் திருகோணமலைப் பகுதியில் பெருமளவிற் காணப்படுவதால் ஆங்கிலத்தில் திருகோணமலை மரம் என்ற பொருளில் (Trincomalee wood என்று) பெயரிடப்பட்டுள்ளது. இது நத்தார் தீவுக் காடுகளிலும் காணப்படுகிறது.[4]
இது கட்டுமான வேலைகளுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.[2] இதன் பட்டையிலிருந்து நார் பெறப்படுகிறது.[3] இக்காலத்தில் தளபாடங்களுக்குப் பயன்படுத்தப்படும் இம்மரம் முற்காலத்தில் கப்பல் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. இது 27 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.