அ. சங்கரன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அ. சங்கரன் (பிறப்பு: மார்ச்சு 30 1947) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துத்துறையில் அன்பு சங்கரன், மலாக்கா சங்கரன், சாரங்கன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர், மலாக்கா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராகச் செயற்பட்டு வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள், கவிதைகள் முதலியவற்றை இவர் அதிகமாக எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
பரிசில்களும், விருதுகளும்[தொகு]
தமிழர் திருநாள் மேடைகளில் இவரின் கதைகளும். கவிதைகளும் பரிசுகள் பெற்றுள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. சங்கரன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்